Sunday, December 28, 2008

டர்ர்ர்ர்ர்ர்

எனக்குன்னு எந்த பளாக்கும் இல்லை ஆனால் பல பின்னூட்டங்கள் மட்டும் அளித்துள்ளேன். சரி இப்போவாவது நம்மக்குன்னு ஒரு அங்கீகாரம் தேடிக்கலாம்னு இந்த "தில்லாலங்கடி" ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். எல்லாரும் என்னை ஆதரிப்பீங்கன்னு ஒரு குருட்டு நம்பிக்கை அதான்.... சரி கதைக்கு வரேன்.

இன்றைய டார்கெட்:
நைஜீரியாவில் இருந்து ஒருவர் என்னைய மாதிரியே ப்ளாக் ஆரம்பித்துள்ளார். இவர் ஒரு பின்னூட்ட தளபதியாம். நான் கூடத்தான் பின்னூட்டம் போட்டேன். எவ்வளவு பின்னூட்டம் அளித்தாலும் எனக்கு அப்படி ஒரு பெயர் வரவில்லை. ம்ம் என்ன செய்வது. அவருக்கு உடல் பூரா மச்சம். என்னா வரவேற்பு, என்னா கைதட்டல், என்னா ஓட்டுக்கள், என்னா பின்னூட்டங்கள். இதை எல்லாம் பார்த்து எனக்கு ஒரே பொறாமை என்று நினைக்கிரீர்களா அதுதான் இல்லை. இதெல்லாம் எனக்கும் கிடைக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கை தான்.

நம் நைஜீரியா நண்பர் சும்மா சொல்லக்கூடாது பதிவு உலகத்தின் முடி சூடா மன்னன்னாக வலம் வருகிறார். அடுத்து அடுத்து பதிவு வேற. என்னா ஸ்பீடு, என்னா நகைச்சுவை. அடடா இவ்வளவையும் எங்கே மறைத்து வைத்திருந்தார். இவரிடம் எல்லாரும் ரொம்ப எதிர்பாக்கராங்கப்பா. இப்படி அமர்க்களமா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சது எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சின்னு நினைக்கிறேன். எப்படி என்றால் எல்லாம் பின்னூட்டம் பார்த்துதான் சொல்றேன். ஆருடம் எதுவும் இல்லை.

இவரு காரு ஓட்டின அருமையை குறித்து, பத்தி பத்தியா சொல்லி இருக்கிறாரே. இதெல்லாம் யாராலே முடியும். நம்மவராலே தான் முடியும். எப்படியோ கார் ஓட்டி மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கிட்டார் போல. நேருக்கு நேர் மோதி அதுல சினிமா மாதிரி பிச்சிகிட்டு போச்சாம். இந்த கண் கொள்ளா காட்சியைப் பார்க்க நாம பக்கத்துலே இல்லையே. சரி நானும் பின்னூட்ட தளபதியை வரவேற்க்கிரேனுங்கோ. அப்பாடா ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்சம் பத்த வச்சாச்சு..........

அடுத்து யாரை!! டர்ர்ர்ர்ர்ர்ர்ர்...